states

காஷ்மீரில் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், ஜூன் 15- ஜம்மு காஷ்மீரின் குல் காம் மாவட்டம் அரே மோகன் போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. ஜூன் 2ஆம் தேதி தீவிரவாதி ஒருவர் வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.  இந்நிலையில், காஷ் மீரின் சோபியான் மாவட்டத் தில் தீவிரவாதிகள் பதுங்கி யிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அத்தகவலின் அடிப் படையில் புதனன்று நடை பெற்ற என்கவுண்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.  அவர்களில் ஒருவர் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜன் முகமது லோன் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிரவாதிதான் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற நபர் என்பதும் உறுதியாகியுள்ளது.

;